சின்னத்திரையில் கானா பாடல்களை அற்புதமாக பாடி வெள்ளித்திரையில் பாட்டெழுதி பாடும் அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தான் கானா பாலா. இவர் பாடிய எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வராததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் உள்ளே இருந்த நிலையில் கடந்த வாரம் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் போட்டியாளரான அக்ஷயா குறித்து பேசியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதில் வீட்டில் இருக்கும் பாதி பேர் அற்புதமாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக அக்ஷயா ஆறு போட்டியாளர்கள் வைத்து விளையாடி வருகிறார். அவர் எதுக்கு இங்க இருந்து நரக வேதனை அனுபவிக்கிறாங்க என்று தெரியவில்லை? அக்ஷயா ஒரு நோயாளி, அவங்க தினமும் ரத்தம் எடுத்து, டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்காங்க பார்க்க பாவமாக இருக்கு. ஏன் கருணை கொலை பண்ணிடுங்கிற நிலைமைல தான் அவங்க இருக்காங்க. அந்த நிலைமையில எதுக்கு இங்க விளையாடனும்? பாவம் அவங்க பிக்பாஸ் வீட்டை விட்டு போகட்டும்.