தமிழ் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தவர் தான் மன்சூர் அலிகான். இந்நிலையில் இவர் லியோ படத்தில் கணவன் நடித்த த்ரிஷா குறித்து தவறாக பேசியதில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும் இதற்கு த்ரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து சென்னை ஆயிரம் மகளிர் நிலையம் இவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. மேலும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் தனக்கு தொண்டையில் பிரச்சனை இருப்பதால் இன்று ஆஜராக முடியவில்லை, மேலும் நாளை விசாரணைக்கு வருகிறேன் என காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போது சென்னை ஆயிரம் மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராகியுள்ளார்.