கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரு தரப்பு போன்ற தொடர்களை வென்று அசத்தினாலும், ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு, புதிய பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்துள்ளது. அதாவது, தற்போது நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் உள்ளார். இது ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது நீட்டிப்பில் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்டகால ஒப்பந்தத்தில் லக்ஷ்மண் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்.. இந்தியாவின் ஸ்டார் வீரர் அதிர்ச்சி தோல்வி.!