ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – முதல்வர் பழனிசாமி பரிசீலனை..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

முதல்வர் அறிக்கை:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 56% என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்பை வைத்து நான் விளம்பரம் தேடுவதாக நாளிதழில் வெளியான செய்தியை மறுத்தார். தான் எப்பொழுதும் கொரோனவை வைத்து விளம்பரம் தேடவில்லை என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விவரிக்க உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here