கேரி பைக்கு கட்டணம் வசூலித்த கடை நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் மன்றம் அபராதம் விதித்துள்ளது.
கட்டணம் வசூலித்த கடைநிர்வாகம்:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றது என்று மக்களை துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்தியது. இதனால், மக்கள் அனைவரும் கடைகளுக்கு துணிப்பைகளை கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த நிலையில், சண்டிக்கரில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர்களிடம் அந்த கடை நிர்வாகம் துணிப்பைகளுக்கு என்று தனியாக 8 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தது.
புகார் அளித்த நுகர்வோர்:
இதனால், அதிருப்தி அடைந்த கரண் சிங்லா என்ற வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த வழக்கினை விசாரித்த மன்ற தலைவர்கள் அந்த கடை நிர்வாகத்திற்கு 32,000 ரூபாய் அதிரடியாக விதித்துள்ளது. கரி பைக்கு கட்டணம் வசூலிப்பது சட்டவிரோத செயல் என்று கூறுகிறது, நுகர்வோர் அமைப்பு