கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கல்லூரித் தேர்வுகள்:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வுகள் ரத்து செய்து உள்ளதாக அறிவித்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!
அந்த அறிவிப்பில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து உறுப்பு கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு அவர்களின் இன்டெர்னல் மற்றும் செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்து உள்ளது.