நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு “தலைவா நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்” என்று கோசம் எழுப்பி போராடி வருகின்றனர். இதனால் போயஸ் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினிகாந்த்:
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது பிறந்தநாள் அன்று தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதி செய்தார். அதன் பின்பு அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ரஜினி அனைத்து தொகுதிகளிலும் போட்டி இடப்போவதாக அறிவித்திருந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த கோளாறு காரணமாக ரஜினி ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 3 நாட்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்பின்பு சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பிய அவர் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது கொரோனா பரவளின் 2 வது அலை வீசி வருகிறது. மேலும் தனது உடல் நிலை காரணமாக என்னால் பிரச்சாரம் செய்ய நேரில் வர முடியாது எனவே தான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதனால் இவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தற்போது இந்த முடிவை ஏற்று கொள்ள முடியாத ரசிகர்கள் முடிவை மாற்றி அமைக்க கூறி போயஸ் கார்டன் இல்லத்தில் கோசம் இட்டு வருகின்றனர். அதிகமான ரசிகர்கள் கூடியுள்ளதால் தற்போது பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். போயஸ் கார்டன் எல்லையில் ரசிகர்கள் அனைவரையும் நிறுத்திவைத்துள்ளனர் போலீஸ்காரர்கள். மேலும் ரசிகர்கள் கூறியதாவது ”தலைவா நீங்கள் நேரில் கூட வர வேண்டாம் உங்களது 1 நிமிட வீடியோ ஒன்று போதும் அனைத்து தொகுதிகளிலும் நாம் சுலபமாக வென்று விடலாம். எம்.ஜி.ஆர் எப்படி படுத்துக்கொண்டே ஜெய்த்தாரோ அதே போல் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே ஜெயிக்கலாம் என்று கோசம் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நம்மாழ்வார் விருது – குவியும் வாழ்த்துக்கள்!!
மேலும் அரசியல் வேலைகளை செய்வதற்காக கழக உறுப்பினர்கள் அனைவரும் தயாராக உள்ளோம் என்றும் தங்கள் எடுத்த முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மற்றொரு மன்ற நிர்வாகி பேசும்போது, “பூத் கமிட்டி மெம்பர்ஸ் ஒரு வீட்டிற்கு சென்றால் 25 போட்டோக்கள் கொடுக்கிறார்கள். தெருவே போட்டோ எடுத்து வந்து கொடுக்கிறார்கள் என்று கூறினார். தற்போது ரசிகர்களுக்காக தனது முடிவை மாற்றியமைப்பாரா ரஜினி??