மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தனது உடல் நிலை முன்னிறுத்தி அரசியலில் இருந்து விலகிய ரஜினி, தனது மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்ற மன உளைச்சலில் உள்ளார் என்று ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனன் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
ரஜினிகாந்த்:
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிக்கு ரத்த அழுத்த கோளாறு காரணமாக அவர் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். மேலும் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிகிச்சைக்கு பின் தனது இல்லத்திற்கு திரும்பிய ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் இவரது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணம் தற்போது கொரோனாவின் 2 வது அலை பரவி வருகிறது மேலும் ரஜனியின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் நீண்ட ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தன்னால் நேரில் வந்து பிரச்சாரம் செய்ய இயலாது என்று கூறி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
‘தலைவா நீங்க அரசியலுக்கு கட்டாயம் வர வேண்டும்’ – ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம்!!
அர்ஜுனன் மூர்த்தி பேட்டி:
தற்போது ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுனன் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி தனது மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். மருத்துவர்களின் அறிவுரையால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதனால் நாம் அனைவரும் இதனை ஏற்று தான் ஆக வேண்டும்.
கண்ணை திறந்து பார்த்தால் மோடி ஐயா செய்யும் நல்ல திட்டங்கள் தான் தெரியும். மேலும் வர போகும் தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு தெரிவிப்பர் என்பதை சுயமாக சிந்தித்து செயல்படுவார். அவரை யாரும் நிர்பந்தபடுத்த முடியாது. மேலும் தமிழகத்தில் நல்லாட்சி வேண்டும் என்று மக்களோடு சேர்ந்து போராடுவர் என்றும் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் இந்த கட்சியில் வந்து சேர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.