பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது 30 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பாலியல் புகார்:
பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ராகுல் ஜெயின் மீது, 30 வயதான ஸ்டைலிஸ்ட் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பாடகர் தன்னை, தனக்கு பர்சனல் ஸ்டைலிஸ்ட்டாக நியமிப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டில் அழைத்துச் சென்று, அவர் படுக்கை அறையில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இந்தப் பெண்ணின் புகாரை அடுத்து, பாடகர் ராகுல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது குறித்து விளக்கம் அளித்த பாடல் ஆசிரியர், தனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் பொய் கூறுகிறார் என்றும் தெரிவித்தார். இவர், ஏற்கனவே பிரபல பாடல் ஆசிரியை, பலாத்காரம் செய்து கருவை கலைக்க வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது இவர் மீது மீண்டும் ஒரு பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.