
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அப்பத்தாவை தன் வசப்படுத்தி வைத்துள்ள குணசேகரன் யாரையும் பார்க்க விடாமல் பிரச்சனை செய்கிறார். ஆனால் ஜனனி எப்படியாவது அப்பத்தாவை பார்க்க வேண்டும் என போலீஸ் கம்ப்ளைன்ட் செய்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் ஜனனி எப்படியோ குணசேகரன் இல்லாத சமயத்தில் அப்பத்தாவை பார்க்கிறார். அப்போது அவரிடம் நீங்கள் பழைய நிலைமைக்கு வரனும். என்ன ஜனனி என்று கூப்பிடனும் என சொல்கிறார். அந்த நேரத்தில் கதிர் வந்துவிட ஜனனியை வெளியே இழுத்து அப்பத்தாவை பார்க்க நீ யார். நீ எதுக்கு இந்த வீட்டில் இருக்க என அசிங்கப்படுத்துகிறார்.
ராதிகாவை நினைத்து பரிதாபப்படும் பாக்கியா.., திட்டித்தீர்க்கும் ஈஸ்வரி.., பாசத்திற்கு ஏங்கும் கோபி!!!
அந்த நேரத்தில் ஈஸ்வரி அவ என்னோட தங்கச்சி. இங்கதான் இருப்பா என கதிருக்கு பதிலடி கொடுக்கிறார். இதை கேட்டு கதிர் எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது இனி வரும் ஒவ்வொரு எபிசோட்டிலும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி ஆகிய நாலு பேரும் கதிர் குணசேகரனை சும்மா விடமாட்டார்கள் என்று தான் தெரிகிறது.