சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல சுவாரசியங்கள் உடன் டெலிகாஸ்ட்டாகி வருகிறது. குணசேகரன், கதிரின் ஆட்டத்தை மொத்தமாக அடக்கிய அப்பத்தா, கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விட்டார். இத்தனை நாள் குணசேகரனின் பேச்சைக் கேட்டு நடந்த மருமகள்கள் இப்போது அப்பத்தாவின் பேச்சை கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்த்து ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, சக்தி என எல்லோரும் அப்பத்தாவுடன் சொந்த ஊருக்கு கிளம்பி சென்று விட்டனர். இப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அப்பத்தா வீட்டில் உள்ள மருமகள் மீது தனது 40% ஷேரை எழுதி வைப்பதற்காக தான் முதல் நாளே அனைவரையும் ஊருக்கு அழைத்து சென்று இருக்கிறார் என்று தெரிகிறது.
இது தெரியாமல் குணசேகரன் ஒரு பக்கம் அப்பத்தாவை தீர்த்து கட்ட கதிருடன் சேர்ந்து சதி திட்டம் போட்டு வருகிறார். ஆனால் இறுதியில் அப்பத்தா தான், குணசேகரனின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அடக்கி வீட்டில் உள்ள மருமகள்கள் காலில் விழ வைப்பார். இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.