எதிர்நீச்சல் சீரியலில் ஒரு பக்கம் சித்தார்த். இன்னொரு பக்கம் ஜனனியின் அம்மா, தங்கை இப்படி இருவரையும் யார் கடத்தி வைத்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் உமையாள் ஜனனி தான் சித்தார்த்தை கடத்தி வைத்துள்ளார் என்று சொல்லி அவரை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கதிர் இத்தனை நாள் குணசேகரன் கூடவே இருந்ததால் அவரது சூழ்ச்சிகள் அனைத்தும் அவருக்கு தெரிந்து விடுமாம்.
மேலும் நிச்சயத்திற்கு பதிலாக திருமணம் தான் செய்யப் போகிறார்கள் என்பதை கணித்த கதிர் சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பாராம். இன்னொரு பக்கம் தர்ஷனிடம் ஜனனியின் அம்மா தங்கையை உன் பாதுகாப்பில் வைத்து விடு என்று சொல்வாராம். இப்போது தர்ஷன் கதிர் இருவரும் சேர்ந்துதான் இவர்களை கடத்தி வைத்துள்ளனர் என்பது போன்று கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் கதிரின் சூழ்ச்சி வலையில் சிக்கி குணசேகரன் அசிங்கப்படுவார் என்று தான் தெரிகிறது.