நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மின்னணு வாக்குச்சீட்டு முறையில் ராணுவ வீரர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வாக்கு சீட்டு கவர் உட்பட அனைத்து ஆவணங்களையும் எலக்ட்ரானிக் முறையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய ராணுவ முகாம் யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி OTP வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.