எதிர்நீச்சல் சீரியல் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் குணசேகரன் ஜீவானந்தம் ஆட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்ட வேண்டும் என பல சதி திட்டங்களை போடுகிறார். இன்னொரு பக்கம் ஜனனி ஜீவானந்தத்தை பற்றி முழு உண்மைகளையும் தெரிந்து கொண்டு சொத்தை காப்பாற்ற போராடுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே ஈஸ்வரி குணசேகரன் பேச்சை மீறி கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இந்த விஷயம் இன்னும் குணசேகரனுக்கு தெரியாது. இப்படி இருக்கையில் அடுத்து ரேணுகாவும் குணசேகரன் பேச்சை மீற ஆரம்பித்து விட்டார். அதாவது நேற்று ரேணுகா, ஐஷுவை கூப்பிட ஸ்கூலுக்கு சென்றுள்ளார். அப்போது ஐஷு ரேணுகாவிடம் இன்றைக்கு டான்ஸ் டீச்சர் வரவில்லை.
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் குழந்தைகளுக்கு நீ டான்ஸ் சொல்லிக் கொடு என்று சொல்ல ரேணுகாவும் சம்மதிக்கிறார். பின் குழந்தைகளுக்கு ரேணுகா டான்ஸ் சொல்லிக் கொடுத்ததை பார்த்து நந்தினி, ஐஷு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சியம் ரேணுகா இனி வரும் எபிசோடுகளில் டான்ஸ் டீச்சர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் சீரியலை விட ரியல் லைஃப்லும் டான்ஸ் டீச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.