எதிர்நீச்சல் சீரியலில் ஒரு வழியாக ஜனனி, ஈஸ்வரி எல்லோரும் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பித்து செல்கிறார். இதனால் அடுத்து தர்ஷினியை கண்டுபிடிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆதிரை குணசேகரனிடம் உனக்கு தர்ஷினி காணாமல் போனது பற்றி கொஞ்சம் கூட கவலை கிடையாது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் நீ இந்த விஷயத்தை வைத்து அண்ணியை அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிற. அது என்னைக்கும் நடக்காது என எதிர்த்து பேசுகிறார். அடுத்ததாக ஜீவானந்தத்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்கின்றனர். இந்த பக்கம் குணசேகரன் விசாலாட்சி இடம் இனி எனக்கு எந்த உறவும் கிடையாது. எல்லாத்தையும் அத்து விட்டுட்டேன் என்கிறார். மேலும் கதிர், சக்தி, ஞானம் எல்லோரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ஆனால் சக்தி நாங்க எதுக்கு போகணும். இங்கதான் இருப்போம் என எதிர்த்துப் பேச குணசேகரன் ஆடிப் போகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
PKL 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்…, 2வது இடத்தை தக்க வைத்த புனேரி பல்டன்!!