சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. எப்படியாவது தர்ஷினியை கண்டுபிடிக்க வேண்டும் என ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனாலும் இப்போது வரை தர்ஷினி கிடைத்தபாடில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தர்ஷினியை கடத்திச் சென்ற காரின் வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து அவர்களிடம் சக்தி சண்டை போடுகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் அவர்கள் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என சொல்லி விடுகின்றனர். பின் சக்தி தண்ணீர் குடித்துக் கொண்டே ரோட்டில் நடந்து வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் அவரை அடித்து தூக்கி வீசுகிறது. இதனால் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். அவரை பார்த்து ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லோரும் கதறி அழுகின்றனர். பின் சக்தியை ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். இது தெரியாத குணசேகரன் அவர்களை தன் அம்மா, கதிர் முன்பு கேவலமாக பேசுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
பி.எப். கணக்கில் தொகை இருப்பு எவ்ளோன்னு தெரியணுமா? இதோ ஈஸியான டிப்ஸ்!!!