எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்து போன விஷயத்தை தெரிந்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஆடிப் போய் உள்ளனர். மேலும் இதுக்கெல்லாம் காரணம் குணசேகரன், கதிர் தான் என ஜனனி, ரேணுகா, ஈஸ்வரி எல்லோரும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் விசாலாட்சி பட்டம்மாள் பாட்டியை எங்கே என்று கேட்க உடனே நந்தினி அவங்களத்தான் உங்க புள்ளைங்க கொலை செஞ்சுட்டாங்களே என்கிறார். இதைக்கேட்டு விசாலாட்சி அதிர்ச்சியாகிறார்.
இந்த பக்கம் ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் குணசேகரன் செஞ்ச தப்ப நிரூபிக்கிறதுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்கிறார். அந்த நேரத்தில் அவரை கைது செய்ய போலீசார் வருகின்றனர். பின் ஜனனி, சக்தி இருவரும் அப்பத்தா இறந்த இடத்தை பார்த்து கதறி அழுகின்றனர். அங்கு இருந்த அப்பத்தாவின் சேலையை கையில் எடுத்துக்கொண்டு ஜனனி குணசேகரனை சும்மா விட மாட்டேன். நிச்சயம் பழி தீர்ப்பேன் என சவால் விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே.., அரசு வேலை கிடைக்க உங்களுக்கான சூப்பரான பம்பர் ஆஃபர்.., மிஸ் பண்ணிடாதீங்க!!