எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் சதி வேலையை தாண்டி எப்படியாவது ஆதிரைக்கும், அருணுக்கும் கல்யாணம் செய்ய ஜனனி பல முயற்சிகளை எடுக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் ஜனனியை காலி செய்ய பல பித்தலாட்டத்தை தம்பி கதிருடன் சேர்ந்து செய்கிறார். இப்படி பல குழப்பத்துக்கும் இடையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இப்போது வெளியாகிய பிரமோவில் குணசேகரன் ஆதிரை கல்யாணத்துக்கு தாலி எடுக்க வெளியே கிளம்புகின்றன. அப்போது ஆதிரையும் வர நீ எதுக்கு என்று குணசேகரன் கேட்கிறார். இதைக் கேட்டு கடுப்பான குணசேகரனின் அம்மா விசாலாட்சி அவளுக்கு புடிச்ச மாப்பிள்ளை தான் நீ கல்யாணம் பண்ணி வைக்கல.
அவளுக்கு பிடிச்ச மாதிரி தாழியாச்சும் எடுக்கட்டுமே என்கிறார். இன்னொரு பக்கம் ஜனனி அருணிடம் நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம். உங்களுக்கும் ஆதிரைக்கும் தான் கல்யாணம் நடக்கும் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.