தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பு!!!
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2019 ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு., ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென நெடுங் காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததால் அவ்வப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கூறுகையில், “தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் மின்வாரிய பணியாளர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் 75,978 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள். இவர்களுக்கு 2019 டிசம்பர் மாதம் முதல் 2023 ஏப்ரல் மாதம் வரை உள்ள இந்த ஊதிய உயர்வு நிலுவை தொகையை கணக்கிட்டு இரண்டு தவணைகளாக கொடுக்க திட்டமிட்டுளோம்.” என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி: கோடியை நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை?? தொடரும் அவலம்!!!

இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.527 கோடி வரை நிதி சுமை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here