சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் அப்பத்தா கண்விழித்ததிலிருந்து சீரியல் கதைக்களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஒரு பக்கம் சொத்துக்காக குணசேகரன் கொலையும் செய்ய துணிந்து விட்டார். இந்த விஷயம் தெரிந்த வீட்டு மருமகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னொரு பக்கம் தன் மனைவியை குணசேகரன் தான் கொலை செய்தார் என்ற விஷயம் ஜீவானந்தத்திற்கு தெரிந்தால் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக 500 வது எபிசோடை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் பல தொடர்கள் தொடர உங்களது ஆதரவு தேவை என பதிவிட்டுள்ளார்”. இந்த பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஐயோ., வேற ட்ரெஸ்ஸே கிடைக்கலையா ஷிவானி., உள்ள இருக்கதெல்லாம் அப்படியே தெரியுது பாருங்க!!
View this post on Instagram