இன்று மாலை 6 மணி வரை தான் டைம் – ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்!!

0

தமிழக முதல்வரை பற்றி மிக சர்ச்சைக்குள்ளாகிய கருத்தை சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்தார். தற்போது இதற்கு விளக்கமளிக்க கூறி தேர்தல் ஆணையம் ராசாவிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம்:

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலில் உள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்திட கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிக தெளிவாக செயல்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் திமுக எம்பியான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பற்றி மிக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் கோபத்துக்குள்ளாகினர். மேலும் ஆ.ராசாவை கண்டித்து அவரது உருவபொம்மையும் எரித்தனர் அதிமுகவினர். இவரது கருத்து குறித்து தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தனது கருத்து குறித்து ஆ.ராசா வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது ஆ.ராசாவிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆ.ராசாவின் கருத்து அவதூறானவை. மேலும் அது பெண்களின் தாய்மையை களங்கப்படுத்துபவை. இந்த செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானவை. எனவே அவர் இதுகுறித்து இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் இல்லையெனில் தேர்தல் ஆணையம் இவரை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here