தமிழக சட்டமன்ற தேர்தல் – இன்று தபால் வாக்குகளை செலுத்தும் காவல்துறையினர்!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையின் தற்போது தங்கள் வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் சில தினங்களுக்கு முன்னே துவங்கிவிட்டது. மேலும் தபால் வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. தற்போது தபால் வாக்குகளை மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் இடத்திற்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்னையில் காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு சேகரிப்பு இன்று காலை 9 மணி முதல் துவங்கியது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சுமார் 6,000 காவலர்கள் இந்த தபால் வாக்கை செலுத்தவுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் மொத்தம் 16 தொகுதியில் தபால் வாக்குகளை செலுத்துவதற்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு சேகரிப்பு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. தபால் வாக்குகள் பெறப்படும் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளில் தபால் வாக்குகளை எப்படி செலுத்த வேண்டும் என்பதை விளக்குவதற்கு ஓர் செய்தி பலகை அமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here