இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0
corona

இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 53,480 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் சில நாட்களாகவே நாள் ஒன்றுக்கு தினமும் 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது கொரோனா பாதிப்பு. இதனால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் மிக பாதுகாப்பாக இருக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் தடுப்பூசி வழங்கும் பணிகளும் அதிகரித்து தான் வருகிறது. இருந்தும் கூட கொரோனா வேகமாக பரவுவது கவலைக்குரியதே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் 53,480 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 354 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,62,468 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 41,280 பேர் குணமடைந்துள்ளனர்.

corona

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,34,301 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 5,52,566 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இதுபோல் நாள் ஒன்றுக்கு தொடர்ந்து 50 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தால் மக்களின் நிலை தான் என்ன??இதனை சுகாதாரத்துறை எப்படி கட்டுக்குள் கொண்டு வரப்போகிறது என்று மக்கள் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here