பொதுவாக நம் பெண்கள் அடர்த்தி மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமென விரும்புவார்கள். இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயில்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி அதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் இன்று நாம் பார்க்க போகும் ஹேர் ஆயில் இயற்கையான முறையில் மிக குறைந்த செலவில் மூலம் வீட்டில் இருந்தபடியே தயாரிக்க போகிறோம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தேவையான பொருட்கள்;
- முதியார் கூந்தல் – 100 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை விளக்கம்;
இந்த இயற்கை homemade ஹேர் ஆயிலை தயாரிப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முதியார் கூந்தல் என்ற மூலிகைச் செடியின் பொடியை வாங்கிக் கொள்ளவும். இப்போது ஒரு வானொலியை அடுப்பில் வைத்து 200 கிராம் தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் நாம் வாங்கி வைத்துள்ள முதியோர் கூந்தல் பொடியை அதில் போட்டு கொதிக்க விடவும்.
மேலும் ஒரு 20 நிமிடங்கள் பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு எண்ணெய் ஆரியவுடன், ஒரு காட்டன் துணிகளில் எண்ணையை வடிகட்டிக் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இப்போது நாம் தயாரித்து வைத்துள்ள இந்த எண்ணெயை தினமும் நம் தலைமுடியில் தேய்த்து வருவதன் மூலம் நம் முடி வளர்ச்சியை அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.