கன்னடத்தின் ‘ஹலோ டாடி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் நிதின் கோபி. இவர் நடித்த முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி, நிஷப்தா மற்றும் சிரபந்தவ்யா’ உள்ளிட்ட பல்வேறு கன்னட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ஸ்ருதி நாயுடு தயாரித்த புனர் விவாஹா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்திற்காக அவருக்கு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்படி பிசியாக இருந்து வந்த இவருக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு கடும் அவதிப்பட்ட நிதின் கோபி அவசரமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிதின் கோபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.