அண்மைக்காலமாக தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் பாபு சொத்து குவிப்பு வழக்கு விசாரணை கைவிட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர் கொடுத்த ரூ.20 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதோடு, அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கித் திவாரி வீட்டில் சோதனை நடத்தியபோது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனவே மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இங்க யாரும் கேங் இல்ல., ஆண்டவரிடம் சிக்கிய மாயா.., இனி நடக்க போவது என்ன? ப்ரோமோ இதோ!!