தமிழக சட்டமன்ற தேர்தல் – மின்னணு வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்!!

0

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக புதிதாக பெயர் சேர்த்திருப்பவர்கள் மின்னணு வாக்காளர் அட்டையை பெறுவதற்கு இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வாக்காளர் அட்டை

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்பதற்கு சிலர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு பதிவு செய்துள்ளனர். இன்னும் சில தினங்களில் தேர்தலை நடைபெறவுள்ளதால் தற்போது மின்னணு வாக்காளர் அட்டையை வழங்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதற்காக இன்று மற்றும் நாளை அனைத்து வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாமை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 3வது நாளாக தொடர் போராட்டம்!!

மேலும் புதிதாக பதிவு செய்த வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் மின்னணு வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதனை https://www.nvsp.in என்ற இணையத்தில் வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே புதிதாக பட்டியலில் பெயரை சேர்த்துள்ள வாக்காளர்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here