தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி உயிர் இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாச மூர்த்தி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா என பல நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரீனிவாச மூர்த்தி. இவர் தமிழிலும் பல படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் டப்பிங் கலைஞர் சங்கத்தின் பொருளாளருமான இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் டப்பிங் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார் ஸ்ரீனிவாச மூர்த்தி. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகம் மட்டுமின்றி டப்பிங் கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு., புதிய திட்டம் அறிமுகம்!இது உண்மையிலேயே மிகப்பெரிய ஜாக்பாட் தான்!!
மேலும் அவரது உடல் தற்போது அவரது இல்லத்தில் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நாளை காலை 11 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.