ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தங்கள் பயனர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளியான அறிவிப்பு:
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் சார்ந்த கணக்குகளை பராமரித்து வரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பாளர் EPFO, தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற மாவட்ட அவுட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இத்திட்டத்தின் மூலம் EPFO அமைப்புக்கும் பயனர்களுக்கும் இடையே மிக சாதகமான ஒரு உறவு ஏற்படும். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதி, நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்காக இந்தியா முழுவதும் 685 மாவட்ட முகாம்களை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சுற்றுலாப்பயணிகள் கவனத்திற்கு.., இனி இதை செய்யக் கூடாது.., மாநில அரசு அதிரடி உத்தரவு!!!
இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமே, பயனர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சாதகமான உறவை வளர்ப்பது தான் என நிறுவனத்தின் நிர்வாக செயலாளர் கருத்து தெரிவித்தார். பென்ஷன் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.