விஜய் டிவியில் புகழ்பெற்ற தாடி பாலாஜியின் மனைவி கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்றதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் தாடி பாலாஜி:
தமிழ் சினிமாவில் சச்சின், தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் தாடி பாலாஜி. அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் தாடி பாலாஜி. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்து கொள்ள வாய்ப்பை பெற்றார். அந்த சீசனில் அவரது மனைவி நித்யாவும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்கள் தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்து இருக்கும் மாதவரத்தில் நித்யா தனது மகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவரின் எதிர் வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியருடன் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நித்யா ஆசிரியரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார்.
காலையில் கார் சேதப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, நித்யா காரை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி சாட்சியுடன் போலீஸ் ஸ்டேஷனில் நித்யாவுக்கு எதிராக புகார் கொடுத்தார். இதையடுத்து ஆசிரியர் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் பிறர் சொத்தை சேதப்படுத்திய பிரிவில் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர். அதன் பின்னர் நித்யா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.