அனைத்து வகை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற புகழ் பெற்ற ஸ்தலமாக கோவா இருக்கிறது. மேலும் இங்குள்ள கடற்கரை, மதுகூடம், ஹோட்டல் போன்ற கொண்டாட்டங்களால் பெரும்பாலான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. இப்படி கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் கோவாவின் சுற்றுலா பகுதிகள் மாசுபட்டு வருகிறது. இதனால் இதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கோவா மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துவதற்கோ, சமையல் செய்வதற்கோ தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.50,000 அபராதம் வசூல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். அதேபோல் விபத்தை தடுக்கும் வகையில் சூரியக் குளியல், கடல் பாறை பகுதிகளில் செல்பி எடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.