தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆசிரியர்கள் சுடிதார், சேலை, சல்வார் போன்ற பாரம்பரிய உடைகளை தங்கள் வசதிக்கேற்ப அணிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் தற்போது பல்வேறு தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது ஆசிரியர்களுக்கு சுடிதார், சல்வார் அணிந்து செல்வதற்கு அனுமதி இருந்தாலும் அவர்கள் சேலையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் வலியுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் சிந்தனையாளர்கள் தற்போது இந்த புகார்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இது போன்ற புகார்கள் மீண்டும் அதிகரித்தால் நிச்சயம் தமிழக அரசு இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த மாவட்ட மக்களுக்கு எல்லாம் கனமழை எச்சரிக்கை? அலெர்ட்டா இருங்க!!!