கடந்த சில தினங்களாக வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “மிதிலி” புயல் நேற்று (நவம்பர் 17) பிற்பகல் வங்கதேசம் கடற்கரை அருகே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம்., இந்த தேதியில் திறக்கப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய 11 மாவட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.