காற்றுமாசு அதிகரித்துள்ள காரணத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நுரையீரல் பாதிப்பால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதை அடுத்து மருத்துவர்கள் அவரை டெல்லியில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு:
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகின்றது. இதனை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சில காலம் குறைந்து இருந்த மாசுபாடு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தான் தீபாவளியின் போது மக்கள் வெடி வெடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி இருக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில வருடங்களாக நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சோனியா காந்தி கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார். தற்போது டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் அவரை பரிசோதிக்கும் மருத்துவர்கள் சில காலம் டெல்லியில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும், இந்தியாவின் வெப்பமயமான பகுதிகளில் தங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அவர் கோவா மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் தங்க நேரிடலாம் என்றும் தெரிகிறது. அவருடன் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி தங்க நேரிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதிப்பு அதிகரித்து வந்ததால் மருத்துவர்கள் இவ்வாறாக அறிவுரை வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.