திமுக.,வுடன் இணைய வாய்ப்பில்லை, புதிய கட்சி தொடங்கலாம் – சென்னையில் முக அழகிரி பேட்டி!!

0

சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் மு.க.அழகிரியின் தாயார் வசித்து வருகிறார். அங்கு சென்று தனது தாயாரின் உடல் நிலையை விசாரித்து கேட்டறிந்த மு.க.அழகிரி, புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார்.

மு.க. அழகிரி பேட்டி:

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் முக அழகிரி. இவரது தாயார் தயாளு அம்மாள் ஆவர். இவர்கள் சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் வசித்து வருகிறர்கள். மு.க.அழகிரி திமுக கட்சியின் முன்னாள் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்தவர். அதன் பின் 2009 ஆம் ஆண்டில் பாராளமன்ற தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட இவர் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின்பு கடந்த கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்று கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி திமுக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் பாஜக.,வுடன் கூட்டணி சேரப்போவதாகவும், பிறகு ரஜினியுடன் கூட்டணி சேரப்போவதாகவும் என்று மாற்றி மாற்றி கூறிக்கொண்டு வந்தார்.

2,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து – மாநில முதல்வர் அதிரடி!!

தற்போது கோபாலபுரத்தில் வசித்து வரும் அவரது தாயார் தயாளு அம்மாள் அவர்களின் உடல்நிலை சரி இல்லாத நிலையில் மு.க.அழகிரி நேரில் சென்று தனது தாயாரின் உடல்நிலையை விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பற்றி ஜனவரி மாதம் 3 ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தனது தொண்டர்கள் விரும்பினால் தனிக் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் ரஜினிகாந்தை சந்திக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் ரஜினிகாந்துடன் கூட்டணி சேரப்போவதாக தெரிகிறது. மேலும் திமுக உடன் கூட்டணி மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here