தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வருகிற மார்ச் மாதம் 11ம் தேதி அன்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
திமுக:
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக்கத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக முனைப்புடன் செய்து வருகிறன்றனர். மேலும் அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்களை செய்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் திமுக கட்சி வருகிற 12ம் தேதி வேட்புமனு தாக்களை செய்ய இருக்கிறார்கள். இதனை முன்னிட்டு வருகிற 11ம் தேதி அன்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்பபோவதாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை அறிக்கையில் இலவச அறிக்கைகள் பல இடப்பெற்றிருந்தன.
கர்நாடகா மந்திரியின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ – பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!
தற்போது இந்த ஆண்டுக்கான அறிக்கையில் இலவச திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கு பதில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் கடனில் இருந்து மீள்வதற்கான திட்டம், நகை கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி அறிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல முக்கியமான அறிக்கைகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.