உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல்
உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் நாடு முழுவதும் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்டன கொரோனா பேரிடரின் போது இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் சமயத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை இரண்டு முறை அதிகப்படுத்தியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கர்நாடகா மந்திரியின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ – பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!
இவ்வாறு உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது லிட்டருக்கு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் திடீர் உயர்வை குறைக்கும் படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது எரிபொருள்கள் மீதான வரியை குறைக்கு படி மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் மீது அழுத்தம் கொடுக்காமல் எரிபொருள்களின் விலை குறைப்பது பற்றி, முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.