19 வருடங்களுக்கு பின் இணையும் கம்போ.., தயாராகும் அன்பே சிவம் 2?.., இயக்குனர் சுந்தர் சி அதிரடி!!

0
19 வருடங்களுக்கு பின் இணையும் கம்போ.., தயாராகும் அன்பே சிவம் 2?.., இயக்குனர் சுந்தர் சி அதிரடி!!
19 வருடங்களுக்கு பின் இணையும் கம்போ.., தயாராகும் அன்பே சிவம் 2?.., இயக்குனர் சுந்தர் சி அதிரடி!!

19 வருடங்களுக்கு முன் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அவரே, சமீபத்தில் பேசியுள்ளார்.

அன்பே சிவம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்பவர் இயக்குனர் சுந்தர் சி. தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த “காபி வித் காதல்” ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுந்தர் சி யின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது அன்பே சிவம் தான். இந்த படத்தின் திரைக்கதை எழுதியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டி ஒன்றில் தொகுப்பாளர்கள் சுந்தர். சி யிடம் நீங்கள் இயக்கிய படத்திலிருந்து எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுந்தர் சி அன்பே சிவம் பட இறுதி சீனில் கமல் ஒரு நாயுடன் மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருப்பார்.

பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் இரண்டாவது கணவர் இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றும், அவரின் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்று ஒரு சிந்தனை எனக்கு இருக்கிறது. உலகநாயகன் சம்மதித்தால் அன்பே சிவம் படத்தின் 2ம் பாகத்தை விரைவில் இயக்குவேன் இன்று பேட்டியில் தெரிவித்தார். இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here