பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். மூன்றாவது திருமணம் செய்து பட்டிதொட்டி எல்லாம் பேமஸானர். அதை விட பீட்டர் பாலை விவாகரத்து செய்த விசயம் தான் காட்டுத்தீயாய் பரவியது.
பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் அவரை பற்றி அவ்வளவு சொல்லியும் வனிதா நம்பவே இல்லை. கடைசியில் பட்டு தான் திருந்தினார் வனிதா. அதாவது கோவாவிற்கு ஹனிமூன் போயிருந்த சமயத்தில் தான் பீட்டர் பால் குடித்து விட்டு அட்டகாசம் செய்ய அங்கேயே அவரை கழட்டி விட்டு வந்துள்ளார்.
அதன் பிறகு பீட்டர் பால் குடிப்பார், கெட்ட பழக்கம் அவருக்கு இருந்தது தெரிஞ்சது, அவரை விவாகரத்து பண்ணிட்டேன் என்று கூறியிருந்தார். இப்பொழுது பீட்டர் பால் என்ன ஆனார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எந்த விஷயமுமே தெரியவில்லை. வனிதா தனது கெரியரை நோக்கி சென்றுகொண்டுள்ளார்.
இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் குடும்பத்துடன் கோவா சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தாலே பீட்டர் பால் பிரச்சனை தான் நியாபகத்திற்கு வருவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram