வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு கெளதம் மேனன் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கெளதம் மேனன்:
கெளதம் மேனன் இயக்கி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க, அதற்கு ஏற்றவாறு ஏ ஆர் ரகுமான் அற்புதமாக இசையமைத்துள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் எப்போது வரும்? என்று ரசிகர்கள் இப்பொழுது இருந்தே ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு பட புரோமோஷனுக்காக தெலுங்கு சேனல் ஒன்றுக்கு கெளதம் மேனன் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது அந்த பேட்டியில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியதாக நினைத்து “மூன்று நான்கு ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்தது’ என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார்.
பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய பிரபலம்.., இனி அவருக்கு பதில் இவர் தான்!!
அதற்கு கூலாக “நான் தான் மணிரத்தினம், நான் படமெடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டேனா எல்லா ஹீரோக்களும் கரெக்டா வந்துருவாங்க ” என்று சிரித்தபடி கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
He really handled it well. What was the anchor thinking here pic.twitter.com/OKtXjB1YHF
— Madras Film Screening Club ? (@MadrasFSC) September 20, 2022