அட்சய திருதியை நாளில் இவரை வணங்கினால் பலன் பன்மடங்கு – செல்வம் பெருக செய்ய வேண்டிய பூஜை..!

0

அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பர். இந்த வருடம் ஊரடங்கால் கடைகள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் ஆன்லைனில் தங்கம் விற்க கடைகள் தயாராகி விட்டன. அட்சய திருதியை நாளில் மகாலெட்சுமியை வணங்கினால் பலன் கிடைக்கும் என்பர். ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த சிவனை வணங்கினால் செல்வம் பெருகும்.

சத்யநாராயண பூஜை:

அட்சய திருதியை நாளென்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.

குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நன்மை பயக்கும்.

அன்னதானம் செய்யுங்கள்:

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வது ஆயுளை அதிகரிக்கும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும். படிக்க வசதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கு உதவலாம். ஆதரவின்றி தவிக்கும் முதியோருக்கு உதவலாம். தங்கத்தை வாங்கி பெட்டிக்குள் பூட்டி வைப்பதால் அது வளர்ந்துடாது. முடிந்த அளவுக்கு அடுத்தவருக்கு தானம் செய்தால் ஆயுள் பெருகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here