பலூனில் கட்டி நாயை பறக்கவிட்ட இளைஞன் – லைக்ஸ் மோகத்தால் சிறை சென்ற யூடியூபர்!!

0

இந்தியாவில் தினமும் மக்களை அதிர்ச்சி செய்யும் வகையில் ஓர் நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. தற்போது அந்த வகையில் டெல்லி பகுதியில் ஓர் இளைஞன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

டெல்லி:

தற்போதைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் இணையத்தில் தான் மூழ்கி வருகின்றனர். மேலும் இணையத்தில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாங்கும் மோகத்தில் இளைஞர்கள் பல்வேறு ஆபத்தான மற்றும் அதிர்ச்சிகரமான செயல்களை செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு விபத்துகள் அரங்கேறி வருகிறது. தற்போது அந்த வகையில் டெல்லியை சேர்ந்த யூ டியூபர் செய்த செயல் அனைவரையும் அதிர வைத்து அவரை சிறை வரை செல்ல வைத்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது மக்கள் ஊரடங்கு காரணமாக யூ டியூபில் பல வினோத வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் டெல்லியை சேர்ந்த யூ டியூபர் கவுதம் சர்மா ஓர் வினோத வீடியோவை தயார் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பல ஹைட்ரஜன் பலூன்களை தயார் செய்து அதில் நாயை கட்டி பலூனை வானத்தில் பறக்கவிட்டார். அந்த நாய் குட்டியும் பலூனுடன் வானத்தில் பறந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குடும்பத்தினருடன் ரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – என்ன பண்றாங்கனு பாருங்களே!!

இதனை வீடியோவாக பதிவு செய்த சர்மா யூ டியூபில் பதிவிட்டார். இது அனைவரையும் அதிரவைத்தது. இதனை பார்த்த டெல்லி போலீஸ் ஷர்மாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஷர்மா தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கூறி அந்த வீடியோவை இணையத்தில் இருந்தும் நீக்கியுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here