கொரோனா தற்போது நாடெங்கிலும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது.
கொரோனா பலி எண்ணிக்கை
உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. . இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 596 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா
சீனாவில் உள்ள ஊஹனில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவையே நிலைகுலைய செய்துள்ளது. உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோர் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 886 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 26 ஆயிரத்து 945 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |