மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணமாக வழங்கும் வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்போது ஏற்றம் கண்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் அவர்களின் ஊதியத்தை பொறுத்தே இதனை உயர்த்தி வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா முழுவத்தும் கொரோனா நோய்த்தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
நிதி நெருக்கடியில் இருந்து இந்தியாவை மீட்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றம் கண்டுள்ளது. இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் நேற்று வரை 33.25 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை – ICMR தகவல்!!!
மேலும் அரசு ஊழியர்களின் மாற கூடிய அகவிலைப்படி மாதத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.210 ஆக உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தது. இதன் மூலம் சுமார் 1.5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த உயர்வு 2021 ஏப்ரல் 1ம் தேதிக்கு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, ரயில்வே சுரங்கம், எண்ணெய் வயல், முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றிற்கு கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.