தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டார். தற்போது அதற்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில் ரசிகர்கள் ஒருவர் மறுப்பதிவை பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன்:
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் சினிமா பிரபலங்கள் பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வகையில் இதுகுறித்து பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாளை சிரிக்க, சிறக்க நாம் உள்ளிருப்போம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த ஊரடங்கு பல தரப்பு மக்களை தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வைத்து வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட ரசிகர் ஒருவர் பார்த்திபனின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனாவை போல் அச்சுறுத்தும் பெட்ரோலின் விலை – திண்டாடும் வாகன ஓட்டிகள்!!
அதில், உள்ளேயே இருந்தால் உணவு யாரு கொடுப்பா, என்று கேட்க இது அனைவரையும் சற்று அதிரவைத்தது. இதற்கு பதிலளித்த பார்த்திபன், சரியான செருப்படி கேள்வி இது, கொரோனா தொற்றினை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி, ஆனால் உள்ளே இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம், இல்லையென்றால் நம் உடலை உண்ண இந்த மண் இருக்கும் என்று தனது ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.