‘முதல்ல எல்லாரும் வீட்டுக்கு போகட்டும் அப்புறம் நான் போறேன்’ – ‘தல’ தோனி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேதி அறிவிக்காமல் தற்போது 14வது ஐபிஎல் மெகா தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை அணி கேப்டன் தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தல தோனி:

இந்தியாவில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் மிக பாதுகாப்பாக நடத்தி வந்தனர் பிசிசிஐ. இந்நிலையில் யாரும் எதிர்பாரத வகையில் சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதனால் வீரர்கள் நலனை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தல தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதன்படி அவர் இதுகுறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, வெளிநாடுகளை சேர்ந்த அனைத்து வீரர்களும் முதலில் அவர்களது இல்லத்திற்கு செல்லட்டும்.

தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000??முழு ஊரடங்கு எதிரொலி!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர்கள் அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்ட செய்தி வந்த பிறகு நான் எனது வீட்டிற்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதுவரை அவர் டெல்லியில் உள்ள விடுதியில் இருப்பதாகவும் கடைசியாக தான் வெளியேறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட தோனி இந்த செயல் மூலம் கேப்டன் என்றால் யார் என்பதையும் உணர்த்தியுள்ளார். இதனை அனைவரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here