தமிழகத்தில் நடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பலரும் கிண்டலடித்து பேசியுள்ளனர்.
ஸ்டாலின் அழகிரி
தமிழகத்தில் நடந்த முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வராத நிலையில் தற்போது இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும் பல திட்டங்களையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் மு.க.ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் இவர் என்னென்ன கட்டுப்பாடுகளையும், நிவாரணங்களையும் வழங்க போகிறார், எந்த திட்டத்தில் கையெழுத்திட போகிறார் என்ற ஆர்வத்தில் மக்கள் உள்ளனர். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 வழங்க போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் நாளைக்கு பதவி ஏற்க உள்ள நிலையில் அவரது அண்ணனான அழகிரி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு அப்பறம் ஒரு பேச்சா எனவும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்து இருக்காரோ?? என்றும் பலவாறு கிண்டலடித்து வருகின்றனர்.