நிதின் கட்காரியிடம் பொறுப்பை கொடுங்கள், PMO எல்லாம் வேஸ்ட்’ – சுப்ரமணிய சுவாமி அதிரடி ட்விட்!!

0

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வரும் நிலையில் இந்த கால கட்டத்தை சமாளிக்கும் பொறுப்பினை நிதின் கட்காரியிடன் கொடுக்குமாறு ராஜ்ய சபா உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று:

இந்தியவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநில அதிகாரிகள் போராடி வருகின்றனர். இருந்தும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வீரியம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை மிக கடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் இந்த கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளிடம் மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வரும் என்றும் தெரிவித்தனர். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000??முழு ஊரடங்கு எதிரொலி!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது இதுகுறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் சுப்ரமணிய சாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தற்போது நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கடுமையாக இருந்து வருகிறது. இந்த கடுமையான காலத்தை சமாளிக்கும் பொறுப்பினை நிதின் கட்காரியிடம் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் PMO வினால் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை இவர் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here