பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போதைப்பொருள் புழக்கம் உள் நுழைந்த நிலையில், அது தொடர்பான குற்றச்சாட்டில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
சுஷாந்த் சிங் வழக்கு:
இந்திய திரையுலகில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இரு பிரபல கன்னட நடிகைகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணையிலும் போதைப்பொருள் பயன்பாடு தெரிய வந்ததால் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக சுஷாந்த் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, போதைப்பொருள் விற்பனையாளர்கள் அப்துல் பாசித், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நினையில் குற்றவாளிகள் 6 பேரும் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அனைத்து ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகுவதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை.
ஏஆர் ரஹ்மான் மீது வரி ஏய்ப்பு புகார் – உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!
இதனால் ரியா சக்ரவர்த்தி செப்டம்பர் 22ம் தேதி வரை மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நடிகரின் தற்கொலை தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் அடுத்தடுத்து வெளியாவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.