ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகரான அக்ஷய் குமார் இன்ஸ்டா லைவில் பியர் க்ரில்ஸ் மற்றும் ஹுமா குரேஷியிடம் பேசும்போது தான் தினமும் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளார்.
பியர் க்ரில்ஸ்
‘இன்டு தி ஒயில்டு வித் பியர் க்ரில்ஸ்’ என்ற என்ற நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியானது. அதில் பியர் க்ரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்ததாக கூறியிருந்தார். அதனை பார்த்தவர்களுக்கு மிகவும் குமட்டிக்கொண்டு வந்தது என்று கூறினர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்நிலையில் அக்ஷய் குமார் பியர் க்ரில்ஸ் மற்றும் ஹுமா குரேஷி மூவரும் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட் செய்தனர். அதில் ஹுமா குரேஷி அக்ஷய் குமாரிடம் யானை சாந்தில் எப்படி தான் டீ குடித்தீர்களோ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அதில் ஒன்றுமில்லை. ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் கோமியம் குடிப்பேன் என்று கூறி அதிர்ச்சியளித்துளார்.
இதனை கேட்ட பலருக்கு நம்பவே முடியவில்லை. மேலும் அக்ஷய் கூறியதாவது, நான் இதற்கு கவலைப்படவில்லை, சந்தோஷத்தில் எனக்கு கவலைப்பட கூட நேரம் இல்லை. தினமும் கோமியம் குடிப்பதால் யானை சாணம் பெரிய விஷயமாக தெரியவில்லை என்று கூறினார்.